விழியின் மொழி!
மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...
Monday 15 July 2013
Thursday 4 July 2013
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...
ரசித்த கவிதை
@@@@@@@@
தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் நீயிருப்பதாக
... செல்பேசி சொல்லிற்று
அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள்
காற்றினில் கரைந்துவிட்டதாக
திரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று
கருத்திடமுடியாது உன் பக்கங்கள்
மூடப்பட்டிருப்பதாக
சமூக வலைத்தளங்கள் சொல்லிற்று
மின்னஞ்சல்கள் அடைந்துவிட முடியாத
பெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக
திரும்பி வந்தவை சொல்லிற்று
இருக்கும் உன் திசையை
நீ காட்டமறுப்பதாக
இணையதள வரைபடங்கள் சொல்லிற்று
உன் பெயர் மட்டும் எப்போதும்
சாம்பல் நிறத்தில் பூத்திருப்பதாகவே
அரட்டைப்பெட்டிகள் சொல்லிற்று
இவை அனைத்தையும்
நொடிக்கொரு தரம்
சரிபார்த்துக்கொண்டிருந்தவள ிடம்
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே
நீ எப்போதும் இருக்கிறாய் என்று
என் மனம் சொல்லிற்று
@@@@@@@@
தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் நீயிருப்பதாக
... செல்பேசி சொல்லிற்று
அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள்
காற்றினில் கரைந்துவிட்டதாக
திரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று
கருத்திடமுடியாது உன் பக்கங்கள்
மூடப்பட்டிருப்பதாக
சமூக வலைத்தளங்கள் சொல்லிற்று
மின்னஞ்சல்கள் அடைந்துவிட முடியாத
பெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக
திரும்பி வந்தவை சொல்லிற்று
இருக்கும் உன் திசையை
நீ காட்டமறுப்பதாக
இணையதள வரைபடங்கள் சொல்லிற்று
உன் பெயர் மட்டும் எப்போதும்
சாம்பல் நிறத்தில் பூத்திருப்பதாகவே
அரட்டைப்பெட்டிகள் சொல்லிற்று
இவை அனைத்தையும்
நொடிக்கொரு தரம்
சரிபார்த்துக்கொண்டிருந்தவள
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே
நீ எப்போதும் இருக்கிறாய் என்று
என் மனம் சொல்லிற்று
Wednesday 14 March 2012
இன்னமமும் தொலைந்தவளாக...நான்!
இன்று
நீ என்னோடு இல்லை!
நினைவுகளைப் பரிசாக அளித்து
வெகு தொலைவில்...
ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
ஜென்மம்என்று ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் உன்னைப்
பிரியாத உறவாய்…!
நீ..!!!
எனக்கு வேண்டும்..
நான் வேண்டும் வரம்
இது ஒன்று தான்…..!
சூரியன் திசை மாற்றி அனுப்பி விட்டான்
உனக்கான தேடலில் – இன்னமமும்
தொலைந்தவளாக...நான்!
நீ என்னோடு இல்லை!
நினைவுகளைப் பரிசாக அளித்து
வெகு தொலைவில்...
ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
ஜென்மம்என்று ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் உன்னைப்
பிரியாத உறவாய்…!
நீ..!!!
எனக்கு வேண்டும்..
நான் வேண்டும் வரம்
இது ஒன்று தான்…..!
சூரியன் திசை மாற்றி அனுப்பி விட்டான்
உனக்கான தேடலில் – இன்னமமும்
தொலைந்தவளாக...நான்!
Wednesday 11 January 2012
என்றுமே அழகு தான்...!
எனது மௌனங்களில்
இன்று புதிய ஓசைகள்
என்னுள் இருந்த இருளில்
இன்று புதிய ஒளி
எனது தனிமையில்
இன்று உனது வரவு
எனது பார்வையில்
எங்கும் உனது பிம்பம்
தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்
சொல்லாத காதலும்
கலையாத கனவும்
என்றுமே அழகு தான்...!
இன்று புதிய ஓசைகள்
என்னுள் இருந்த இருளில்
இன்று புதிய ஒளி
எனது தனிமையில்
இன்று உனது வரவு
எனது பார்வையில்
எங்கும் உனது பிம்பம்
தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்
சொல்லாத காதலும்
கலையாத கனவும்
என்றுமே அழகு தான்...!
Subscribe to:
Posts (Atom)