Tuesday 31 May 2011

என் இதயத்தில்

என் இதயத்தில்
தாயாய்…
தந்தையாய்…
தோழனாய்…

உன் பெயரையே
என் கவிதையாய்
பொறித்து
வைத்திருக்கிறேன் நான்!

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

உன் பாதங்களை தொட்டுக் கொள்ள...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

அதி அற்புதமான கவிதை...

இவ்வுலகின்
அதி அற்புதமான
கவிதை...
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

நீ தேடிப்போகும் அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
..

Sunday 29 May 2011

உன் அன்பு கிடைக்கும் என்றால்...

நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் அன்பு கிடைக்கும் என்றால்...

அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
ஆழமானது...

நினைவூட்டுகிறாய்!

செல்லச்
சண்டைகளில்
கொஞ்ச நேர
மெளனங்களில்
கூடித் திரியும்
பொழுதுகளில்
இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..
இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ
இந்த உலகில் நானும்
தனிமையிலில்லை என்பதை
நினைவூட்டுகிறாய்!
ஆயிரம் இழப்புகள்....
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும்

நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்

உன் அன்புக்காக !!!!!
இறைவன் படைத்து .. இயல்பு கெடாமல்..
தொடரும் பட்டியலில் ..இன்னும் இருக்கிறது ..
குழந்தையின் சிரிப்பு
 
சின்னதாய் இருந்த என் நெற்றிக் குங்குமம் இன்னும் 
வட்டம் பெரிதாகி விடுகிறதுஓவ்வொரு முறையும் உன் மூச்சுக் காற்று பட்டு!

Saturday 28 May 2011

நீயும் உன் அன்பும்....

நான் பறப்பதற்கு
சிறகு தேவை இல்லை
நீயும்
உன் அன்பும் போதும் .....

உள்ளத்தில் இன்னிசையாக...

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

உச்சம் மீண்டும் தொடுவர்..





அணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது..
உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் தொட்டார்கள்!

சுனாமி வந்தது, புரட்டிப் போட்டது..
அணு உலை வெடித்தது ; ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் மீண்டும் தொடுவர்..

Friday 27 May 2011

எனது கற்பனையில் நீ

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

மனதில் பதிந்த காவியம்...

மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...

உனக்காய் உனக்காய்...

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

கவிதையை விடவும் அழகாய்...

சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......

தேடுவதும் தேடப்படுவதும்

அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு

ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்

oru ponmanai naan pada by shasireca

என்றும் இளமையாய்...

காதலே!
இறைவனிடம்
எப்படி வேண்டினாய் ?
உனக்கு மட்டும்
இப்படி ஒரு வரம்
நீ மட்டும்
என்றும் இளமையாய்...