Sunday 29 May 2011

உன் அன்பு கிடைக்கும் என்றால்...

நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் அன்பு கிடைக்கும் என்றால்...

அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
ஆழமானது...

நினைவூட்டுகிறாய்!

செல்லச்
சண்டைகளில்
கொஞ்ச நேர
மெளனங்களில்
கூடித் திரியும்
பொழுதுகளில்
இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..
இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ
இந்த உலகில் நானும்
தனிமையிலில்லை என்பதை
நினைவூட்டுகிறாய்!
ஆயிரம் இழப்புகள்....
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும்

நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்

உன் அன்புக்காக !!!!!
இறைவன் படைத்து .. இயல்பு கெடாமல்..
தொடரும் பட்டியலில் ..இன்னும் இருக்கிறது ..
குழந்தையின் சிரிப்பு
 
சின்னதாய் இருந்த என் நெற்றிக் குங்குமம் இன்னும் 
வட்டம் பெரிதாகி விடுகிறதுஓவ்வொரு முறையும் உன் மூச்சுக் காற்று பட்டு!