Wednesday 1 June 2011

நான் தொலைந்தே போனேன்.

உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.

நீ சிரித்த மறு கணம்!!!

அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!

உன் அன்பால்

உன் அழகால்
தினமும் எனை கொன்று போனாய்
உன் அன்பால்
தினமும் எனை வென்று போனாய்..!