Friday 17 June 2011

என் உள்ளத்தில் இன்னிசையாக...

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

உனக்குத் தெரியாது

என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
நினைத்துக் கொள்கிறாய்
உனக்குத் தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........

மனதில் பதிந்த காவியம்...

மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...

நீ எனக்குள் வாழ்வதால்!

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

காற்றை போலத்தான் - நீயும்

உன் காதோர கூந்தலை
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்

அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .

இரு விழிகளின் ஒளிப்பதிவு

அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு

ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்