Thursday 4 July 2013

நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...

ரசித்த கவிதை
@@@@@@@@

தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் நீயிருப்பதாக
... செல்பேசி சொல்லிற்று

அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள்
காற்றினில் கரைந்துவிட்டதாக
திரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று

கருத்திடமுடியாது உன் பக்கங்கள்
மூடப்பட்டிருப்பதாக
சமூக வலைத்தளங்கள் சொல்லிற்று

மின்னஞ்சல்கள் அடைந்துவிட முடியாத
பெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக
திரும்பி வந்தவை சொல்லிற்று

இருக்கும் உன் திசையை
நீ காட்டமறுப்பதாக
இணையதள வரைபடங்கள் சொல்லிற்று

உன் பெயர் மட்டும் எப்போதும்
சாம்பல் நிறத்தில் பூத்திருப்பதாகவே
அரட்டைப்பெட்டிகள் சொல்லிற்று

இவை அனைத்தையும்
நொடிக்கொரு தரம்
சரிபார்த்துக்கொண்டிருந்தவளிடம்
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே
நீ எப்போதும் இருக்கிறாய் என்று
என் மனம் சொல்லிற்று

No comments:

Post a Comment