Wednesday, 1 June 2011

நான் தொலைந்தே போனேன்.

உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.

நீ சிரித்த மறு கணம்!!!

அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!

உன் அன்பால்

உன் அழகால்
தினமும் எனை கொன்று போனாய்
உன் அன்பால்
தினமும் எனை வென்று போனாய்..!

Tuesday, 31 May 2011

என் இதயத்தில்

என் இதயத்தில்
தாயாய்…
தந்தையாய்…
தோழனாய்…

உன் பெயரையே
என் கவிதையாய்
பொறித்து
வைத்திருக்கிறேன் நான்!

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

உன் பாதங்களை தொட்டுக் கொள்ள...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

அதி அற்புதமான கவிதை...

இவ்வுலகின்
அதி அற்புதமான
கவிதை...
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது