Saturday, 16 July 2011

நீ சிரித்த மறு கணம்!

அடுக்கடுக்காய்
நீ சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!

என் அன்பைப் போல..

கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் கண்களில் தென்படுவதில்லை
என் அன்பைப் போல!

Saturday, 25 June 2011

இல்லாமல் போவதைவிட!

இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட!

சொல்லி புரிய வைக்கும் வார்த்தைகளைவிட

சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......

Friday, 17 June 2011

என் உள்ளத்தில் இன்னிசையாக...

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

உனக்குத் தெரியாது

என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
நினைத்துக் கொள்கிறாய்
உனக்குத் தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........

மனதில் பதிந்த காவியம்...

மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...