மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...
Friday, 27 May 2011
கவிதையை விடவும் அழகாய்...
சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......
No comments:
Post a Comment