எனது மௌனங்களில்
இன்று புதிய ஓசைகள்
என்னுள் இருந்த இருளில்
இன்று புதிய ஒளி
எனது தனிமையில்
இன்று உனது வரவு
எனது பார்வையில்
எங்கும் உனது பிம்பம்
தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்
சொல்லாத காதலும்
கலையாத கனவும்
என்றுமே அழகு தான்...!