Monday 15 July 2013



உனது மனம் கல்லால் ஆனது
என்ற எனது எண்ணத்தை
இன்று முதல் மாற்றிக் கொள்கிறேன்
உனது மனம் உண்மையில் இரும்பால் ஆனது
என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்
காரணம் எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்

அழகான கவிதை
@@@@@@@@@


ஒவ்வொரு முறை எனை நீ 
  காயப்படுத்துன்கிற போதும் 
  உன்னைப் பற்றி திட்டி 
  எழுதத் தான் மனம் துடிக்கும்.
 எழுதி முடித்த பின்
  தான் நானே அறிவேன்...
  உன்னை திட்டி எழுதாமல் 
 உன்னை பற்றி அழகாக‌
 கவிதை எழுதி இருக்கிறேன் என்று






இன்னொரு நாள்
#################
நீ இந்நேரமாவ‌து
என்னைப் பற்றி சிந்திப்பாயா
என்னும் எண்ணத்திலேயே
இன்றும் கழிந்தது இன்னொரு நாள்

ஒளிரும் அலைபேசியில்
உன் பெய‌ரை
ரசித்தே பேசப்படாமல்
போயின உன் அழைப்புகள்